தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெரியூர் கிராமத்தில் 14 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அதிகாலை வீட்டிலிருந்த சிறுமி திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர்.

ஆனாலும் அவரை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சிறுமியை யாராவது கடத்தி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.