மதுரை மாவட்டத்தில் இருந்து தார் கலவை ஏற்றி கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை அருண்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச்சாலையில் மெட்டூர் மேம்பாலத்தில் சென்றபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி சாலையோர தடுப்புகளை உடைத்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அருண் பாண்டி உயிர் தப்பினார். இந்த விபத்தில் லாரியில் கொண்டு வந்த தார் கலவை சிதறியது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர்.