கடலூர் மாவட்டத்தில் உள்ள பலஞ்சநல்லூர் கிராமத்தில் வினிதா(17) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று வினிதா, அவரது தங்கை தேவிகா, தம்பி விஜயகுமார் ஆகியோருக்கிடையே செல்போனை யார் பயன்படுத்துவது என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் மூன்று பேரும் சண்டை போட்டுக் கொண்டனர். இதனை பார்த்த வினிதாவின் தந்தை சங்கரன் தனது பிள்ளைகளை கண்டித்துள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த வினிதா தனது வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இதனையடுத்து வினிதா மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வினிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.