சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து யார் இந்தியா விமானம் நேற்று காலை 6 மணிக்கு டெல்லி செல்ல தயாராகிக் கொண்டிருந்தது. அதிகாலை 5 மணிக்கு சோதனைகள் முடிந்து 164 பயணிகள் விமானத்தில் ஏற தயாராக இருந்தனர். இந்நிலையில் விமானி எந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டுள்ளதை கண்டறிந்ததால் விமானம் தாமதமாக புறப்பட்டு செல்லும் என அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.

இதற்கிடையே விமான நிலைய பொறியாளர்கள் எந்திரங்களை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் பழுதை சரி செய்ய இயலவில்லை. இதனால் காலை 10 மணிக்கு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வேறு விமான மூலம் பயணிகள் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சில பயணிகள் பயணத்தை நாளை ஒத்தி வைக்குமாறு கூறிவிட்டு சென்றனர். விமானிகள் எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதை முன்னரே கண்டுபிடித்ததால் 164 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.