திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பட்டியில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் விஜயாவுக்கும் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்திவரும் சேதுபதி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் சேதுபதி விஜயாவின் வீட்டிற்கு சென்று அவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார்.

இதனை தடுக்க வந்த விஜயாவின் மகன் பிரேம்குமாரையும் சேதுபதி தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த இருவரும் நிலக்கோட்டைய அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சேதுபதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.