கோயம்புத்தூரில் இருந்து அரசு பேருந்து நேற்று முன்தினம் இரவு நேரத்தில் சத்தியமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள நல்லூர் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றார். அவர் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் பெருந்தை ஓரமாக ஒதுக்கினார்.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதனையடுத்து பயணிகள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்டது.