கரூர் மாவட்டத்தில் உள்ள நாகைநல்லூரில் வைஷ்ணவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் விஜயராகினி(16) நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று விஜயராகவினின் கரூரில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டார்.

ஆனால் மாலை நீண்ட நேரம் ஆகியும் விஜயராகினி வீட்டிற்கு திரும்ப வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் விஜயராகினியை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விஜயராகினியை தேடி வருகின்றனர்.