கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்படியில் ஓய்வு பெற்ற கல்லூரி ஊழியரான அருணாச்சலம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகளின் கணவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு கொட்டாரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்ப்பதற்காக அருணாச்சலம் சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றார்.

அப்போது கன்னியாகுமரி நோக்கி சிபின் என்பவர் ஓட்டி வந்த சுற்றுலா வேன் அருணாச்சலம் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த அருணாச்சலத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அருணாசலம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.