திருச்சி மாவட்டத்தில் உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கல்பனா சாவ்லா என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவையில் இருக்கும் கல்லூரி விடுதியில் தங்கி இருந்து ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கல்பனா சாவ்லா கோவையிலிருந்து திருச்சிக்கு புறப்பட்டு வந்துள்ளார்.

ஆனால் அவர் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கல்பனா சாவ்லாவின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காணாமல் போன கல்பனா சாவ்லாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.