திருச்சி மாவட்டத்தில் உள்ள எடைமலைபட்டி புதூரில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவகாமி என்ற மகள் உள்ளார். இந்நிலையில் கீழபஞ்சபூரை சேர்ந்த தர்மராஜ் என்பவர் குடிபோதையில் நாகலட்சுமியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அவர் தகராறு செய்து தாய், மகள் இருவரையும் தகாத வார்த்தைகளால் திட்டி மரக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த சிவகாமியும், நாகலட்சுமியும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தர்மராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.