தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து குளிர்ந்த காற்று வீசி அருவிகளில் தண்ணீர் கொட்டும். இந்நிலையில் செப்டம்பர் மாதத்தில் பருவமழை தொடங்கி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாக இல்லாததால் அருவிகளில் குறைவாக விழும் தண்ணீரில் உற்சாகமாக குளித்து மகிழ்கின்றனர்.