அரியலூர் மாவட்டத்தில் உள்ள இடங்கண்ணி கிராமத்தில் மணிமாறன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மனிஷா(17) என்ற மகள் உள்ளார். இவர் கும்பகோணத்தில் இருக்கும் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது பொங்கல் விடுமுறையை முன்னிட்டு மனிஷா தனது வீட்டிற்கு சென்றுள்ளார். கடந்த 19-ஆம் தேதி திடீரென மனுஷா காணாமல் போய்விட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மணிமாறன் தனது உறவினர்களுடன் மகளை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தார். ஆனாலும் மனிஷாவை கண்டுபிடிக்க இயலவில்லை. இதுகுறித்து மணிமாறன் தா.பலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மனிஷாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.