புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பூங்கா நகரில் குருசபரி என்பவர் வசித்து வருகிறார். இவர் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் ஸ்பிரிட் எண்ணெய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் குருசபரியின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. மறுமுனையில் பேசிய நபர் தனக்கு மும்பையில் வி.கே.ஜி.கே என்டர்பிரைசஸ் என்ற பெயரில் எண்ணெய் நிறுவனம் இருப்பதாகவும், மிக குறைந்த விலைக்கு ஸ்பிரிட் எண்ணெய் கிடைக்கும் எனவும் கூறியுள்ளார். மேலும் அவர் வீடியோ காலில் ஸ்பிரிட் எண்ணெய் காண்பித்துள்ளார்.

இதனை நம்பி பல்வேறு தவணைகளாக குருசபரி 16 லட்சத்து 19 ஆயிரத்து 999 ரூபாய் பணத்தை அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார். ஆனால் அவர் பணத்தையும் தரவில்லை. எண்ணையையும் அனுப்பவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குருசபரி புதுக்கோட்டை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.