கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க வந்த ஒரு வருடம் முதியவர் சட்டை பையில் இருந்த பண பர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். நேற்று ஒரு முதியவர் அந்த பகுதியில் சுற்றி திரிந்தார்.

இதனை பார்த்த பொதுமக்கள் அவர்தான் திருடன் என நினைத்து அவரை சரமாரியாக தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பொதுமக்கள் தாக்கியதால் காயம் அடைந்த முதியவர் கருங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மதுசூதனன்(62) என்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.