கரூர் மாவட்டத்தில் உள்ள கீரனூர் ஊராட்சி மீனாட்சிபுரத்தில் பாலசுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யுவன் சங்கர் என்ற மகன் இருந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் யுவன் சங்கர் கல்லூரிக்கு பேருந்தில் சென்று விட்டு மாலையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதனையடுத்து அறைக்குள் சென்று கதவை பூட்டி கொண்ட யுவன்சங்கர் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.