தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கீழ திருப்பந்துருத்தி நடுபடுகை மெயின் ரோடு பகுதியில் ராசு  என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் மனோஜ் குமார். கடந்த 20 நாட்களுக்கு முன்பாக மனோஜ் குமார் தனது தந்தையிடம் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு அவரது தந்தை உனது அண்ணன் மற்றும் இரண்டு தங்கைகளுக்கு திருமணம் செய்து வைத்த பின் உனக்கு திருமணம் செய்து வைக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக மனோஜ் குமார் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் வாழை கொள்ளையில் உள்ள கீற்று கொட்டகையில் மூங்கிலில் லுங்கியால் மனோஜ் குமார் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.