சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் புதியதாக கட்டப்பட்ட கேலரியை தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நவீன வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள பெவிலியனுக்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயர் நினைவாக சூட்டப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி, இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவர் டோனி, சென்னை அணி பந்துவீச்சு பயிற்சியாளர் ப்ராவோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கு முன்னதாக சேப்பாக்கம் மைதானத்தில் அண்ணா பெவிலியன் கட்டப்பட்டபோது அதனை கருணாநிதி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது பெயரிலான பெவிலியனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.