தமிழகத்தில் அடுத்த சில மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8 மணி நேரத்தில் சென்னையில் 4.7 செ.மீ மழையும், காஞ்சிபுரத்தில் 4.5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் வெளியே செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதோடு தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.