நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி பேசும் திமுக சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதிக்குமா என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிலையில் இது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அந்நிய மண்ணில் இந்தியாவை ராகுல் அவமதித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மேலும் திமுகவுக்கு நான் சவால் விடுகிறேன். சட்டப்பேரவையில் குறுக்கீடு இல்லாமல் அரை மணி நேரம் ஆவது பேச என்னை திமுக அரசு அனுமதிக்குமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.