இந்திய நிலப்பரப்பில் இருபுறமும் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள் இருக்கின்றன.  மத்திய மேற்குக்கை ஒட்டிய தென்மேற்கு அரபிக் கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக்கி,  தற்போது அதி தீவிர புயலாக தேஜ்  புயல் உருவாகி இருக்கிறது. இது வலு குறைந்து மிகத்தீவர புயலாக மாறி,  எமனுக்கு அருகே கரையை கடக்கும். கரையை கடக்கும் 150 கிலோமீட்டர் வேகத்துல காற்று வீச வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

வங்க கடலில் பார்த்தோம் என்றால் ? அங்கேயும் ஒரு காற்றழுத்த  தாழ் பகுதி உருவாகி,  காய்ச்சலுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இருக்கிறது. இது புயலாக  மாறினாலும் நம்மை நோக்கி வராது.

வங்கக்கடலில் இருக்கும் சலனம் தமிழகத்தை நோக்கியோ,  ஆந்திர பகுதிகளை நோக்கி வராமல் வடக்கு வடகிழக்கு திசையில் திரும்பி,  வங்கதேசம் அதனை ஒட்டி இருக்கும் மேற்கு வங்க கடலோரம் பகுதியை நோக்கி அடுத்த மூன்று நாட்களுக்கு நகரம் என சொல்லி உள்ளார்கள்.

ஒருவேளை இந்த சலனம் தமிழகத்தை நோக்கி வரும் பட்சத்தில் கனமழை இன்னும் அதிகமாக இருக்கும். மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும்.  தமிழகத்துடைய பல பகுதிகளிலும் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருந்திருக்கும். ஆனால் இது நம்மை நோக்கி வராமல் வங்கதேசத்தை நோக்கி செல்வதன் காரணமாக ? தமிழகத்தில் ஒரு சில இடங்களில்…

குறிப்பாக ஏழு மாவட்டங்களில் மட்டும் கன மழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக தென் மாவட்டங்கள் மற்றும் மத்திய மாவட்டங்கள். தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், தேனி போன்ற மாவட்டங்களின்  மற்ற இடங்களில்..  தென்தமிழகத்தில் உள்ள ஒரு சில இடங்களிலும்,  வட தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

அடுத்து வரக்கூடிய ஆறு நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை பெய்ய தான் வாய்ப்பு இருக்கிறது. இரண்டு புறமும் இரண்டு சலனங்கள் இருந்தாலும்,  இரண்டுமே நம்மை நோக்கி வராத காரணத்தினால் நமக்கு மழைப்பொழிவு குறைவாகத்தான் இருக்கும். கனமழை,  மிக கனமழை மாதிரி இல்லாம மிதமான மழையாக  இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டிருக்கிறது. அடுத்த 48 மணி நேரம் இரண்டு நாட்களுக்கு சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.