திருச்சியில் மருது சகோதரர்கள் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக ஆளுநர் ஆர்.என்  ரவி  பேசிய போது, மருது சகோதரர்களின் தியாகம் மக்களால் கொண்டாடப்படக்கூடாது என ஆளுங்கட்சி  நினைக்கிறது. அக்டோபர் 23 முதல் 31 வரை மக்கள் இயல்பாக நடமாடுவதற்கு தமிழக அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசியல் கட்சிகளின் தலைவரின் நினைவு தினத்தில் அரசால் இப்படி தடை போட முடியுமா ? சுதந்திரப் போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது. காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் ஜாதி சங்க தலைவர்களாக மாற்றி இருப்பர்.

தியாகிகளை ஜாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று பட விடாமல் தடுக்கிறார்கள். தமிழகம் புண்ணிய பூமி. இங்கு ஆரியம் – திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாலும் கொள்கைக்காகவே கால்டுவெல் போன்றவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர் எனவும் பேசி உள்ளார்.