கரூர் மாவட்டத்தில் உள்ள மணிமங்கலம் பாலாஜி நகரில் பிச்சைகாந்தி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சந்திரா(63) என்ற மனைவி உள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று சந்திரா வீட்டிற்கு முன்பு நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி மூதாட்டியை தாக்கியுள்ளனர்.

பின்னர் அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க சங்கிலி, 1 பவுன் தங்க கம்மல் ஆகியவற்றை பறித்து அவரை கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனால் காயமடைந்த சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது தொடர்பாக சந்திரா அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.