மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்பதற்கு இனிமேல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளி ஆணையகரம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளில் கலந்து கொள்வதற்கு துறையின் முன் அனுமதி பெற வேண்டும்.

மேலும் இதற்கான விண்ணப்பங்களை முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து ஆணையகரத்திற்கு பரிந்துரை செய்து அனுப்புவதில் காலதாமதம் ஏற்படுவது தெரியவந்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக இனிவரும் காலகட்டங்களில் தங்கள் மாவட்ட அலகுகளுக்குள்பட்ட ஆசிரியர்களுக்கு அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகளை போட்டி தேர்வுகளில் பங்கேற்பதற்கு முன்பு அனுமதி வழங்கலாம் என கூறப்பட்டுள்ளது.