அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் அருகே ஆமணக்குதோண்டி என்ற பகுதியில் வீரபெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் கடைக்கு சைக்கிளில் சென்றார். இந்நிலையில் சாலையை கடக்க முயன்ற போது எதிரே வசந்த் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டி படுகாயமடைந்த வீர பெருமாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதற்கிடையே வசந்த் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு கார் மீது மோதியது. இதனால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வசனத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வசந்த் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.