திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கண்ணக்கந்தல் கிராமத்தில் பாலாஜி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கோயம்புத்தூரில் டிப்ளமோ படித்து வந்தார். இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு பாலாஜி கண்ணகந்தலில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்றார். நேற்று காலை உறவினர் வீட்டிற்கு பாலாஜி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் கொட்டகுளம் அருகே சென்ற போது எதிரே திண்டிவனம் நோக்கி சென்ற சரக்கு லாரி மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த பாலாஜி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் அங்கு சென்று பாலாஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.