தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழில் சுல்தான் மற்றும் வாரிசு போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னட சினிமாவில் ஹீரோயின் ஆக அறிமுகமான ராஷ்மிகா மந்தனா தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். இவர் விஜயுடன் சேர்ந்து நடித்த வாரிசு திரைப்படம் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.

பாலிவுட் சினிமாவிலும் அதிக படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா அடிக்கடி விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இந்நிலையில் மும்பையில் நடந்த ஒரு பேஷன் ஷோ நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா மந்தனா கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கருப்பு நிறத்தில் வித்தியாசமான புடவை அணிந்து ராஷ்மிகா கலந்து கொண்டுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.