பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் வித்யா பாலன். இவர் தமிழில் அஜித்துடன் சேர்ந்து நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அவ்வப்போது நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது நடிகை வித்யா பாலனும் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து பேசி உள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, என்னை ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்த போது அந்த படத்தின் இயக்குனரை சென்னைக்கு வந்த போது நான் சந்தித்து பேசினேன்.

நான் காபி ஷாப்பில் அமர்ந்து பேசலாமா என்று கேட்டதற்கு அந்த இயக்குனர் ஹோட்டலுக்கு செல்லலாம் என்று கூறினார். அவரின் எண்ணம் எனக்கு புரிந்ததால் நான் ஹோட்டல் அறையின் கதவை மூடாமல் அவரிடம் பேசினேன். அவர் சிறிது நேரம் காத்திருந்தார். நான் அவருக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்பது தெரிந்து விட்டதால் அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். மேலும் அந்த படத்தில் இருந்தும் என்னை நீக்கிவிட்டார் என்று வித்யா பாலன் கூறியுள்ளார்.