சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் தனியார் அறக்கட்டளையின் 25-வது ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, கடவுள் இல்லை என்று சொல்பவர்களை பார்த்தால் எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. நம்முடைய உடம்பில் உள்ள இதயம் நாம் பிறந்ததிலிருந்து 70, 80 வருடங்கள் வரை துடிப்பதற்கு எந்த விஞ்ஞானியும் காரணம் இல்லை.

இதேபோன்று நம் உடலில் உள்ள ஒரு துளி ரத்தத்தையாவது விஞ்ஞானிகளால் உருவாக்க முடியுமா. இவற்றையெல்லாம் பார்த்தும் ஒரு சிலர் கடவுள் இல்லை என்று கூறுகிறார்கள். இதைக் கேட்கும்போது எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. மேலும் ரஜினிகாந்த் இவ்வாறாக பேசிய வீடியோவை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.