மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யா ராய், திரிஷா உட்பட பலரது நடிப்பில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தின் 2 ஆம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகத்தின் இறுதி கட்டப் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

முதல் பாகம் அதிக வரவேற்பை பெற்றதால், 2-ம் பாகத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ஆசிய திரைப்பட விருதுக்கு சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த தயாரிப்பு வடிவமைப்பாளர், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது பொன்னியின் செல்வன் பாகம்-1. இன்று ஹாங்காங்கில் நடைபெறும் இந்த விழாவில் படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத், ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.