விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் சாலையில் திருவண்ணாமலைக்கு 30 பயணிகளுடன் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை ராஜாஜி என்பவர் ஓட்டி சென்றார் நடத்துனராக விஜயகுமார் என்பவர் பணியில் இருந்தார். இந்நிலையில் சாலையின் குறுக்கே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க ராஜாஜி சடன் பிரேக் பிடித்தார்.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் இறங்கி நின்றது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான பேருந்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.