கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ராசு வீதியில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உமா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சங்கர் தனது மனைவியுடன் குண்டலப்பட்டி சிவனாபுரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு காரில் சென்றனர். அதன் பிறகு மதியம் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் எள்ளுகுட்டை ஏரி அருகே சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் ஏரியின் தடுப்பு சுவரில் மோதி ஏரிக்குள் பாய்ந்தது. இதனை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சங்கர் மற்றும் உமாவை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று கிரேன் மூலம் காரை மீட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.