கேரளாவில் காதலனுக்கு ஜூஸில் விஷம் கலந்து கொடுத்து காதலியே கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதேப்போன்று ஒரு சம்பவம் தற்போது கர்நாடகாவிலும் அரங்கேறியுள்ளது. அதாவது காதலியின் பிறந்தநாள் அன்று அவரை தனியாக வரவழைத்து காதலன் கேக் ஊட்டி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெங்களூரில் உள்ள கனகபுரா என்ற பகுதியில் சர்வதேச பாதுகாப்பு பிரிவில் பணிபுரியும் நவ்யா (24) என்பவர் வசித்து வந்துள்ளார்.

இவர் அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். கடந்த 11-ஆம் தேதி நவ்யாவுக்கு பிறந்தநாள் வந்த நிலையில் அதை கொண்டாட வேண்டும் என பிரசாந்த் கூறியுள்ளார். ஆனால் அன்றைய தினம் வேறு வேலை இருந்ததால் மற்றொரு நாளில் பிறந்த நாளை கொண்டாடலாம் என நவ்யா கூறியுள்ளார். இதற்கிடையில் நவ்யா வேறு ஆண் நண்பர்களுடன் மொபைல் போனில் சேட் செய்வதை பிரசாந்த் கண்டுபிடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் நேற்று முன் தினம் நவ்யா பிறந்த நாளை கொண்டாட முடிவு செய்து அவரை தனியாக ஒரு இடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு நவ்யா கேக் வெட்டிய நிலையில் பிரசாந்த் தன்னுடைய காதலிக்கு கேக்கை எடுத்து ஊட்டி விட்டுள்ளார். அதன்பிறகு நவ்யா ஆண் நண்பர்களுக்கு சேட் செய்வது குறித்து பிரசாந்த் கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த பிரசாந்த் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து நவ்யாவை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிரசாந்தை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.