புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளவாய்பட்டியில் சாமிக்கண்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் முக்கண்ணாமலைப்பட்டி செங்குளம் கடை வீதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கும் உறவினர்களான ராசுவின் மகன்கள் ரங்கசாமி(27), சின்னதுரை(29) ஆகியோருக்கும் இடையே கோவில் பிரச்சனை காரணமாக ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற அன்று சாமிக்கண்ணு குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமியும், சின்னதுரையும் சாமிக்கண்ணுவை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சாமிகண்ணு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ரங்கசாமி, சின்னத்துரை ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.