தூத்துக்குடியில் நேற்று படுகொலை செய்யப்பட்ட VAO பிரான்சிஸ் உடற்கூறாய்வு தற்போது தொடங்கியுள்ளது. திருநெல்வேலி அரசு மருத்துவமனையில், மருத்துவர் செல்வ முருகன் தலைமையில் உயர்மட்ட குழு பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனைக்குப் பின் உடல் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டைக்கு எடுத்துச் செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் ஒருவர் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.