செந்தில் பாலாஜி வழக்கில் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்க துறைக்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவிட்டது. அதன்படி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இன்று நீதிபதி அள்ளி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது உடல் நிலையை கருத்தில் கொண்டு தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும்,  ஏற்கனவே இரு மாதங்களுக்கும் மேலாக காவலில் இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ததற்கு அவகாசம் வேண்டும் என அமலாக்கத்துறை திறப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி,  அமலாக்கத்துறை பதிலளிக்க வழக்கின் விசாரணையை வரும் வரும் 15ஆம் தேதிக்கு  ஒத்திவைத்தார்.