செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பரிசீலிக்க  மூன்று பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று பேர் குழு மூன்று மாதத்துக்குள் அறிக்கை வழங்கும். பகுதி நேர ஆசிரியர்களுக்கு 2500 ரூபாய் சம்பளம் உயர்த்தப்படும். இனி பத்தாயிரம் ரூபாய்க்கு பதில் ரூ.12,500 மாத சம்பளம் வழங்கப்படும். 10,00,000 ரூபாய்க்கான மருத்துவ காப்பீடு பகுதி நேர ஆசிரியர்களுக்கு அறிமுகப்படுத்தப்படும். ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்