மக்கள் தங்களுக்கு தேவையான  பணத்தை வங்கிகளில் சென்று எடுக்காமல் தற்பொழுது ஏடிஎம் மூலமாகவே எடுத்து வருகின்றனர். இது மக்களுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள எஸ்டேட் பகுதிகளுக்கு நாள்தோறும்  ஸ்டேட் பேங்க் ஆப்  இந்தியாவின்  நடமாடும் ஏடிஎம் சேவை வாகனம் செல்கிறது.

இதனால் அப்பகுதியிலுள்ளவர்கள்  பணம் எடுக்க நகர்ப்புறங்களுக்கு வராமல், சொந்த ஊர்களிலேயே ஏடிஎம் சேவையை பெறுகின்றனர். இந்த வாகனம் மூலம் சேவை அளித்து வரும் ஸ்டேட் பேங்க் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் நன்றி கூறியுள்ளார்கள். மாதந்தோறும் சம்பளம், ஓய்வூதியம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட தொகைக்காக மக்கள் அடிக்கடி நகரப்பகுதிகளுக்கு வர வேண்டியுள்ளது.