தமிழகத்தில் மழை மற்றும் வெள்ள பாதிப்பு காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ஐந்தாவது நாளாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் நெல்லை மாவட்டத்தில் 1 முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் விடுமுறை அளித்தும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் வழக்கம் போல இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல்லையில் இன்று நடைபெற இருந்த அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.