தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழும் ஊட்டி மலைக்கு பயணிகளுக்காக மலை ரயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தினம்தோறும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கும் மீண்டும் உதகையிலிருந்து மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கும் மலையில் ரயில் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கனமழை காரணமாக பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டதால் மலை ரயில் டிசம்பர் 22ஆம் தேதி இன்று ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.