மிக்ஜாம் புயல் தமிழகத்தை தாக்கும் என கூறப்படுவதால் முதல்வர் ஸ்டாலின் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாதிப்புக்கு உள்ளாகும் மக்களுக்கு தங்கும் வசதி மற்றும் உணவு ஆகியவற்றை வழங்கிட சமையல் கூடங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் போக்குவரத்து நெரிசலை விரைந்து சரி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல உத்தரவுகளை முதல்வர் பிறப்பித்துள்ளார்.