12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டதாக எம்.எல்.ஏ.க்களுக்கு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் திருத்த மசோதா ஏப்.21ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதால் மே 1ம் தேதி மசோதா திரும்பப் பெறப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்த நிலையில், வாபஸ் பற்றி எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.