திராவிட மாடல் கொள்கை என்பது காலாவதியானது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளது  சர்ச்சையை  உண்டாக்கும் விதமாக உள்ளது. ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்த அவர், காலாவதியான கொள்கையை வைத்துக் கொண்டு திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கொள்கையை மீண்டும் புதுப்பிப்பதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

ஒரே நாடு ஒரே பாரதம் கொள்கைக்கு எதிரானதே திராவிட மாடல். முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்ல மனிதர், அவர் மீது மிகுந்த மரியாதை உள்ளது. மாநில அரசுகளின் நிர்வாகத்தில் ஆளுநர்கள் தலையிடுவதாக கூறுவது தவறான குற்றச்சாட்டு என்று கூறியுள்ளார்.