பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்த நிலையில், தீப்பெட்டி அல்லது கேஸ் சிலிண்டர் கேட்டு மதிமுக விண்ணப்பித்திருந்தது. பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால், முன்னுரிமை அடிப்படையில் திருச்சியில் மதிமுக வேட்பாளர் துரை வைகோவுக்கு தீப்பெட்டி சின்னம் ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், விசிகவும் பதிவு செய்யப்பட்ட கட்சி என்பதால் திருமா, ரவிக்குமாருக்கு பானை சின்னம் கிடைக்க வாய்ப்புள்ளது.