தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் மற்றும் அஜித் நடிப்பில் துணிவு ஆகிய திரைப்படங்கள் 8 வருடங்களுக்கு பிறகு ஒரே நாளில் இன்று தமிழகம் முழுவதும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் படம் பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த பரத்குமார் என்பவர் லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே விழுந்து பலி. சிந்தாரிப்பேட்டை ரிச்சி தெருவை சேர்ந்த பரத் குமார் (19) மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிர் இழப்பு. பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரி மீது ஏறி நடனமாடிய போது கீழே விழுந்தார் பரத்குமார். முதுகுத்தண்டில் காயம் ஏற்பட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பரத்குமார் உயிரிழப்பு.