தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் இன்று மாணவர்களுக்கான ஆதார் அட்டை பதிவு முகாம் நடைபெறுகிறது. அனைத்து மாணவர்களும் ஆதார் கோரி விண்ணப்பிக்கலாம். குறிப்பாக அரசு பள்ளிகளில் ஆறு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகள் உயர்கல்வியில் சேரும்போது புதுமைப்பெண் திட்ட மூலம் ஆயிரம் ரூபாய் மற்றும் மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம் மூலம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. இதற்கு ஆதாரம் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.