திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகள் தமிழக தேங்காய் வியாபாரிகளிடமிருந்து தேங்காய்  கொள்முதல் செய்யப்பட்டு ரேஷன்  கடைகள் மூலமாக மக்களுக்கு தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்யப்படும் என்று வாக்குறுதி கொடுத்திருந்த நிலையில், திமுக அரசு பொறு ப்பேற்ற பின்னும் இது தொடர்பான எந்தவித தகவல்களும் மற்றும் திட்டம் குறித்தான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று அரசுக்கு எதிராக புகார் எழுந்த வண்ணம் இருந்தது.

மேலும் பாமாயில் விற்பனையை தவிர்த்து விவசாயிகளிடம் இருந்து தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டு தேங்காய் எண்ணெய் வினியோகம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர். இது தொடர்பாக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தமிழக ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டம் குறித்து அரசு பரிசீலனை செய்யும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.