திமுக கூட்டணியில் இரு மக்களவைத் தொகுதிகளை மதிமுகவும், 16 தொகுதிகளை காங்கிரஸும் கேட்டு மனு அளித்துள்ளன. அக்கட்சிகளின் மாநில நிர்வாகிகள் பலர் தேர்தலில் போட்டியிட விரும்புகின்றனர். ஆனால் மதிமுகவில் துரை வைகோவுக்கு மட்டும் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.

காங்கிரஸில் பலருக்கு சீட் கிடைக்காத நிலை உருவாகியுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மதிமுக மற்றும் காங்கிரஸ் தலைவர்களை அதிமுகவுக்கு இழுக்க இ பி எஸ் உத்தரவிட்டுள்ளாராம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.