ஆடி அமாவாசை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 17ஆம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஆடி அமாவாசை முன்னிட்டு 17ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தில் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பா. விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.. 17ஆம் தேதி விடுமுறை ஈடு கட்டும் விதமாக 22ஆம் தேதி பள்ளி கல்லூரிகள் இயங்கும் என அவர் தெரிவித்துள்ளார்..

மேலும் ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமானோர் ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வர உள்ளனர் எனவும்,
போக்குவரத்து நெரிசல் ஏற்படும் சூழலை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகள் நலன் கருதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்..