செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள காரணைபுதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராமன் நகரில் கருத்தோவியன்(62) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு மஞ்சுளா(53) என்ற மனைவி இறந்துள்ளார். இருவரும் தனியாக வசித்து வருகின்றனர். அதே பகுதியில் மஞ்சுளாவின் இரண்டு மகன்களும் வசித்து வருகின்றனர்.

நேற்று காலை நீண்ட நேரமாக கருத்தோவியன் வீட்டு கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் அவரது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வீட்டிற்கு வந்த மகன்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கருத்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகவும், மஞ்சுளா படுக்கையில் இறந்த நிலையிலும் கிடந்ததை கண்டு கதறி அழுதனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணவன் மனைவி ஆகிய இருவரின் உடல்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் கருத்தோவியன் இருதய நோயாலும், மஞ்சுளா நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

மேலும் கடன் தொந்தரவு அதிகமாக இருந்ததால் இருவரும் மன உளைச்சலில் இருந்தனர். இதனால் கருத்தோவியன் தூக்கு போட்டும், மஞ்சுளா நீரிழிவு நோய் மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.