மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன்(95) காலமானார். சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறையில் இருந்த போது இவரின் வாத திறமையில் தான் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாக வாதிட்டார். எமர்ஜென்சி காலத்தில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தவர். அவருக்கு பத்ம விபூஷன் மற்றும் பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.